close
Choose your channels

சாணி மேல தள்ளி விட்டுட்டாங்களே: ஆர்ஜே மணிமேகலை புலம்பல்

Sunday, April 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஆர்ஜே மணிமேகலை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தனது சொந்த கிராமத்தில் இருந்து கொண்டு வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிராமத்து பெண் ஒருவருடன் தான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டை விளையாடும் போது திடீரென அருகிலிருந்த சாணி மீது அவர் விழுந்துவிடுகிறார். இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து புலம்பி தள்ளியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

என்ன ஒரு வில்லத்தனம் இவ்வளவு நாள் நல்ல பிள்ளைகள் மாதிரி இருந்துட்டு இப்போ என்னையவே ஏமாத்துறாங்க இந்த சிறுவண்டு பசங்க. சாணியில கீழே தள்ளிவிட்டதுக்கு அடுத்த விளையாட்டுல பழி வாங்கணும். என்னோட சின்ன வயசு பேவரைட் விளையாட்டு இது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு வீடியோவில் சிறுவன் ஒருவன் தனக்கு பம்பரம் விட தெரியவில்லை என்று அடிக்க வருகின்றான் என்றும் வர வர மரியாதையே இல்லாம போச்சு என்றும் புலம்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos