விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்த கொலையாளிகள் கைது

  • IndiaGlitz, [Monday,January 16 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் ரிலீஸ் தினத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி என்பவர் மர்மமான முறையில் இறந்தார் என்று செய்தி வெளிவந்தது. இவரது மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஒருசில ஆதாரங்கள் கிடைத்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் ரவியை கொலை செய்த மூவரை சற்று முன் போலீஸார் கைது செய்துள்ளனர். சீனிவாசன் , அப்பு, பாபு ஆகிய மூவரும் ரவியை அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்து அவரது உடலை ஓரிக்கை பாலாற்றில் வீசியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News

விஜய்யின் 'பைரவா' தமிழக வசூல் முழுவிபரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' சென்னை வசூல் நிலவரம்

கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன இளையதளபதி விஜய்யின் சென்னை வார இறுதி வசூல் குறித்த நிலவரங்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் பொங்கல் திருநாளில் வெளியான பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...

சூர்யா ரசிகர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி

நாளை சூர்யா திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் புதிய டீசர் மற்றும் முக்கிய காட்சிகளின் க்ளிப்பிங்ஸ் ஆகியவற்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த 'காதலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊர்வசி ஊர்வசி' பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலுக்கான வரிகளை அவரது ரசிகர்கள் அனுப்பி வந்தனர் என்பதும் தெரிந்ததே...

ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? சரத்குமார் விளக்கம்

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் சரத்குமார் மீது சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது...