close
Choose your channels

விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்த கொலையாளிகள் கைது

Monday, January 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் ரிலீஸ் தினத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி என்பவர் மர்மமான முறையில் இறந்தார் என்று செய்தி வெளிவந்தது. இவரது மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஒருசில ஆதாரங்கள் கிடைத்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் ரவியை கொலை செய்த மூவரை சற்று முன் போலீஸார் கைது செய்துள்ளனர். சீனிவாசன் , அப்பு, பாபு ஆகிய மூவரும் ரவியை அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்து அவரது உடலை ஓரிக்கை பாலாற்றில் வீசியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.