கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ’மணிகர்னிகா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்ததாகவும் அந்த படத்தில் வாள் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது நிஜ வாள் தனது நெற்றியில் பட்டதால் ஏற்பட்ட காயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆன ‘மணிகர்னிகா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு இயக்குனர்களில் ஒருவராகவும் கங்கனா ரனவத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காயத்தோடு தான் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அந்த அனுபவம் தனக்கு மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பகிர்ந்துள்ள இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தற்போது ஏற்பட்ட காயம் என பதறி உள்ளனர். ஆனால் அவருடைய விளக்கத்தை அடுத்தே நிம்மதி அடைந்துள்ளனர்.

View this post on Instagram

मणिकर्णिका का पहला दिन था,तलवारबाज़ी का सीन एक महीना रेहर्स हो चुका था,मगर पहले ही शॉट में सह कलाकार ने रॉंग क्यू पे गलती से लगभग एक किलो की असली तलवार को मेरे सिर पे दे मारा. मैंने कहा लक्ष्मीबाई ने मुझे पेशवाओं का तिलक लगाया है जो सदा मेरे चेहरे पे चमकेगा #झांसी_की_रानी_कंगना

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on Aug 24, 2020 at 11:43pm PDT

More News

ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும்

தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்

தனுஷ் நடித்த 'மாரி 2' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே.

திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன