close
Choose your channels

கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

Tuesday, August 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ’மணிகர்னிகா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்ததாகவும் அந்த படத்தில் வாள் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது நிஜ வாள் தனது நெற்றியில் பட்டதால் ஏற்பட்ட காயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆன ‘மணிகர்னிகா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு இயக்குனர்களில் ஒருவராகவும் கங்கனா ரனவத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காயத்தோடு தான் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் அந்த அனுபவம் தனக்கு மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பகிர்ந்துள்ள இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தற்போது ஏற்பட்ட காயம் என பதறி உள்ளனர். ஆனால் அவருடைய விளக்கத்தை அடுத்தே நிம்மதி அடைந்துள்ளனர்.

View this post on Instagram

मणिकर्णिका का पहला दिन था,तलवारबाज़ी का सीन एक महीना रेहर्स हो चुका था,मगर पहले ही शॉट में सह कलाकार ने रॉंग क्यू पे गलती से लगभग एक किलो की असली तलवार को मेरे सिर पे दे मारा. मैंने कहा लक्ष्मीबाई ने मुझे पेशवाओं का तिलक लगाया है जो सदा मेरे चेहरे पे चमकेगा #झांसी_की_रानी_कंगना

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.