close
Choose your channels

கார்த்தி மட்டும் இதை செய்தால் நான் சினிமாவை விட்டே போகிறேன்: கஞ்சா கருப்பு..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி மட்டும் 'பருத்திவீரன்’ போன்ற இன்னொரு படத்தில் நடித்து விட்டால் நான் சினிமாவில் விட்டே போகிறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக திரையுலகினர் பலர் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக இன்னும் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை

இந்த நிலையில் 'பருத்திவீரன்’ திரைப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமீரின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் தான் அந்த படத்தை முடிக்க பணம் கொடுத்து உதவினார்கள் என்றும் அமீர் எப்படி பொய் கணக்கு காட்டுவார் என்றும் ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார் என்றும் தெரிவித்தார்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட அமீர் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் கார்த்தி மற்றும் சூர்யா இந்த பிரச்சனையை பேசி முடித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அமீர் எப்போதும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் நான் அவருடைய கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருந்து வருகிறேன் என்று கூறிய அவர், பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றியதால் தான் கார்த்தி இன்று பெரிய நிலையில் உள்ளார் என்றும் கார்த்தி மட்டும் இதே மாதிரி ஒரு படம் பண்ணிவிட்டால் நான் சினிமாவை விட்டு போகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.