நிவாரண பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்: நெட்டிசன்கள் ஆத்திரம்

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

கேரள மாநிலத்தை போலவே கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெரும் பாதிப்பில் உள்ளநிலையில் அம்மாநில அரசும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தங்கள் கைகளாலே நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான ரேவண்ணா என்பவர் நிவாரண பொருட்களை மக்களிடம் அலட்சியமாக தூக்கி எறியும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் ஆத்திரம் அடைந்து அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருபக்கம் கேரளாவில் படகில் ஏற படிக்கட்டாக மாறி தியாக மனப்பான்மையுடன் சேவை செய்து வரும் நிலையில் விலங்குகளுக்கு தூக்கி போடுவது போல் நிவாரண பொருட்களை அமைச்சர் தூக்கி போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் தூக்கி போட்ட பொருட்களை பலர் நிராகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கனவு நனவாகியது: ரஜினியின் அடுத்த படத்தில் த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் மிகச்சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. கமல், அஜித், விஜய் உள்பட சீனியர் மற்றும் இளையதலைமுறை நடிகர்கள்

கேரள வெள்ளம்: விஜய் ரசிகர்களின் பெருமைக்குரிய பணி

சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநில மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். கேரள மக்களின் துயர் துடைக்க ஜாதி, மத, இன, மாநில வேறுபாடின்றி இந்தியாவே உதவிக்கரம் நீட்டி வருகிறது.

தயாரிப்பாளர் என்னிடம் தவறாக அணுகினார்: நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு

கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஆர்.எக்ஸ் 100' என்ற தெலுங்கு படத்தின் நாயகி பயல்ராஜ்புத் அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.

கேரள வெள்ள நிவாரணத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த நிதி

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதத்திற்காக கமல், ரஜினி உள்பட பல கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

மறுபடியும் காப்பாற்றப்படும் ஐஸ்வர்யா! இப்படி பண்றிங்களே பிக்பாஸ்

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, காயத்ரியை விட பலமடங்கு பார்வையாளர்களுக்கு வெறுப்பை  தந்தவர் ஐஸ்வர்யா என்று கூறப்படுகிறது.