close
Choose your channels

நிவாரண பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்: நெட்டிசன்கள் ஆத்திரம்

Monday, August 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலத்தை போலவே கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெரும் பாதிப்பில் உள்ளநிலையில் அம்மாநில அரசும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் நேரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தங்கள் கைகளாலே நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான ரேவண்ணா என்பவர் நிவாரண பொருட்களை மக்களிடம் அலட்சியமாக தூக்கி எறியும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் ஆத்திரம் அடைந்து அமைச்சரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருபக்கம் கேரளாவில் படகில் ஏற படிக்கட்டாக மாறி தியாக மனப்பான்மையுடன் சேவை செய்து வரும் நிலையில் விலங்குகளுக்கு தூக்கி போடுவது போல் நிவாரண பொருட்களை அமைச்சர் தூக்கி போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் தூக்கி போட்ட பொருட்களை பலர் நிராகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.