சென்னையில் ரூ.10க்கு சாப்பாடு: சத்தமின்றி கார்த்தி ரசிகர்கள் நடத்தி வரும் உணவகம்!

  • IndiaGlitz, [Thursday,February 03 2022]

சென்னையில் சத்தமில்லாமல் கார்த்தியின் ரசிகர்கள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு அளித்துவரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மக்களுக்கு வேலை இன்றி வருமானமின்றி வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பொதுமக்களின் சேவை ஒன்றையே கணக்கில் கொண்டு கார்த்தி ரசிகர்கள் சென்னை வளசரவாக்கத்தில் கடந்த பல மாதங்களாக பத்து ரூபாய்க்கு முழு சாப்பாடு அளித்து வருகின்றனர்

சுகாதாரமான 50 ரூபாய் மதிப்புள்ள இந்த சாப்பாடு லாப நோக்கமின்றி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் கார்த்தியின் ஆதரவுடன் அவருடைய ரசிகர் மன்றத்தினர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்

தினமும் 12.30 மணி முதல் 01.30 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் தினமும் 100 பேர்களுக்கு சாப்பாடு அளிக்கப்படுகிறது என்பதும் அந்த பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் இந்த உணவகத்தில் வந்து சாப்பிட்டு திருப்தியுடன் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ஆதரவுடன் அவரது ரசிகர்கள் சத்தமில்லாமல் பல மாதங்களாக செய்து வரும் இந்த சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

புனித் ராஜ்குமாரின் கடைசி படத்திற்கு டப்பிங் கொடுத்தவர் யார் தெரியுமா?

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கடைசி திரைப்படத்திற்கு அவருக்கு பதிலாக

ஒரு பதிவிற்கு கோடிக்கணக்கில் சம்பளமா? அசர வைக்கும் சினிமா பிரபலங்கள்!

சினிமா துறையில் பிரபலமாக இருந்துவரும் பல நட்சத்திரங்கள் சமூகவலைத் தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் இவர்தான்!

சென்னை மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி:  இன்று பூஜை!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. 

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பயணம்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம்!

சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படமான 'மெரீனா' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து இந்த பத்தாண்டு பயணம் குறித்து ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.