பூஜையுடன் தொடங்கிய கார்த்தியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

'தேவ்' படத்தை அடுத்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், டூயட் பாடல்கள் இன்றி உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்தியின் 19வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய 'கீதா கோவிந்தம்' படத்தின் நாயகியாக நடித்தவர் என்பதும், இவர் அறிமுகமாகும் தமிழ்ப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது

விவேக் மெர்வின் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது


 

More News

பொள்ளாச்சி காமவெறியர்களுக்கு தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளம்பெண்களின் மனதை சமூக வலைத்தளங்கள் மூலம் கெடுத்து அவர்களின் வாழ்வினை சீரழித்த திருநாவுக்கரசு உள்பட நான்கு கயவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது

ஜீவாவின் 'கீ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் ஜீவா, தான் நடித்து முடித்த 'கீ' படத்தினை மலைபோல் நம்பியுள்ளார்.

ஒரே டைட்டிலில் விஜய்-சிவகார்த்திகேயன் படங்கள்!

பிரபல நடிகர்கள் நடித்த பழைய படங்களின் டைட்டிலை புதிய படங்களுக்கு வைப்பது கோலிவுட்டில் ஒரு டிரெண்டாக இருப்பது தெரிந்ததே.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் எழுத்தாளர்

கல்கி, பாலகுமாரன், சுஜாதா முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை பல தமிழ் எழுத்தாளர்கள் திரையுலகிலும் ஜொலித்து வந்த நிலையில் அந்த வரிசையில்

பாய்பிரண்டுகளுடன் போலீஸை தாக்கிய பிக்பாஸ் ஜூலி! சென்னையில் பரபரப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பொதுமக்களின் கவனத்தை கவர்ந்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த நரித்தனத்தால் அனைவராலும் வில்லியாக பார்க்கப்பட்டார்