close
Choose your channels

பாய்பிரண்டுகளுடன் போலீஸை தாக்கிய பிக்பாஸ் ஜூலி! சென்னையில் பரபரப்பு

Wednesday, March 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பொதுமக்களின் கவனத்தை கவர்ந்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த நரித்தனத்தால் அனைவராலும் வில்லியாக பார்க்கப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜூலி, நேற்று சென்னையில் தனது பாய்பிரண்டுகளுடன் சேர்ந்து போலீஸை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் ஜூலியும் அவரது பாய்பிரண்டுகளும் சென்ற கார் நடுரோட்டில் நீண்ட நேரம் நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டு பூபதியை ஜூலியின் பாய்பிரண்டுகள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து ஏட்டு பூபதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஜூலி மற்றும் அவரது பாய்பிரண்டுகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் ஜூலியின் பாய்பிரண்டுகள் மீது தவறு இருப்பதாக தெரிய வந்தால் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.