close
Choose your channels

காலையில் எடப்பாடி, மாலையில் ஸ்டாலின்: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் சந்திப்பு

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் இன்று ஆட்சியை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதால் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக ஆதரவில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர்கள் காட்டில் கடந்த சில மாதங்களாகவே விடாமல் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இந்த மூன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இவர்களின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் இன்று காலை மூவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துவிட்டு பின்னர் திடீரென மாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். பேரறிவாளனின் பரோலுக்கு நடவடிக்கை எடுத்த இருவருக்கும் நன்றி கூறவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த சந்திப்புக்கு உண்மையான காரணமாக இருக்கும் என்று நம்புவோமாக!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.