மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் அண்ணா சமாதியின் பின்னால் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல் உள்பட கட்டுமான பொருட்கள் அண்ணா சமாதிக்குள் கொண்டு செல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் கட்டுமான பணிகள் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் நல்லடக்கம் செய்யும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக அண்ணா நினைவிடத்தின் வலதுபுறத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் இடம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கருணாநிதி மறைவு: விஜய்யின் 'சர்கார்' படக்குழுவின் அதிரடி முடிவு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து அவரது உடலை சென்னை மெரீனாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தரப்பில் நேற்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது

கருணநிதிக்கு அஜித், சூர்யா அஞ்சலி: அமெரிக்காவில் இருந்து விஜய் திரும்புவாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதி மறைவு செய்தி கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திரையுலகினர் ஆழ்ந்த சோகத்துடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.