ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் செலவழிக்க முடியாதா? கமலுக்கு நடிகை கேள்வி 

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

சமீபத்தில் ‘இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் நேற்று கமலஹாசனை சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த கண்டனம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி இந்தியன் படப்பிடிப்பின்போது மூன்று உயிர்கள் இழந்துள்ள நிலையில் ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் மூன்று மணி நேரம் விசாரணைக்கு வருவதில் கமலுக்கு என்ன பிரச்சனை? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல்? என்ற கேள்வி வரும்’ என்று கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

More News

பாஜகவில் மேலும் ஒரு பிரபல நடிகர்: ராதாரவி தகவல்

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் துறையிலுள்ள பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தம் கொட்டிய நிலையிலும் படப்பிடிப்பை தொடர்ந்து அருண் விஜய்: இயக்குனர் ஆச்சர்யம்

கோலிவுட் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் லேசான காயம் ஏற்பட்டாலே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விடும் நிலையில் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு ரத்தம்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள வீடியோ..!

கொரோனா வைரஸானது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியா, என இந்தியா வரை இந்த வைரஸின் தாக்கம் உள்ளது.

ரஜினியுடன் கூட்டணி சேர கமலுக்கு நிபந்தனை விதித்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன

ஆர்யாவை பார்த்தாலே எனக்கு வலிக்கின்றது: சாயிஷாவின் அதிர்ச்சி டுவீட்

நடிகர் ஆர்யா விரைவில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ள சல்பேட்டா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார்