'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்! 

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுகுறித்த புரமோக்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்த சீசனின் 14 போட்டியாளர்களும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்பதும் அவர்கள் குறித்த முழு தகவல்களையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நான்காவது சீசன் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் தனக்கு இன்னும் வரவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்தான் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செலவுக்கு உதவுவதற்காக தான் என்றும், ஆனால் இன்னும் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் தரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நான் எப்பொழுதுமே பொய்யான வாக்குறுதிகளை நம்புவது இல்லை என்று கூறிய கஸ்தூரி, சம்பள விஷயத்தில் இப்படி நடக்கும் என நான் எதிர் பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளரான கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என கூறியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தனிமையான வில்லா, நீச்சல்குளத்தில் மாளவிகா: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார்

அரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு!!! ஏஐசிடிஇ அதிரடி!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சோகம்!

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

அசத்தலான யார்க்கர்கள்: தமிழக பந்துவீச்சாளர் நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.