திருமணத்திற்கு பின் காத்ரீனா கைஃபின் உணர்ச்சிகரமான முதல் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதவ்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் என்ற கோட்டையில் மிகவும் பிரமாண்டமாக காத்ரீனா மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நடைபெற்றது. திருமணம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் காத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ’இந்த தருணத்திற்கு எங்களை கொண்டு வந்த அனைவருக்கும் எங்களுடைய இதயங்களில் இருந்து அன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கும்போது உங்கள் அனைவரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments