தாய்லாந்தில் கணவருடன் செம்ம ரொமான்ஸ்.. கிளாமரில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை கீர்த்தி பாண்டியன் கடந்தாண்டு நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கணவருடன் தாய்லாந்து கடற்கரையில் ரொமான்ஸ் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நடிகர் அசோக்செல்வனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் கணவருடன் இணைந்து நடித்த ’ப்ளூ ஸ்டார்’ என்ற படம் வெளியானது என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கீர்த்தி பாண்டியன் தனது கணவருடன் தாய்லாந்தில் உள்ள தீவில் சுற்றுலா சென்றுள்ளார். தாய்லாந்து கடற்கரை, தாய்லாந்து கடைவீதி மற்றும் தண்ணீரில் மிதக்கும் புகைப்படங்களையும் கீர்த்தி பாண்டியன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
வரும் 18ஆம் தேதி நடிகை கீர்த்தி பாண்டியன் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அவர் தாய்லாந்து தீவில் தனது கணவருடன் பிறந்த நாளை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments