'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் விஜய்க்கு கெட்ட பெயர் வரும்: பிரபல தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Thursday,June 04 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அனைத்து கடைகளும் நிறுவனங்களும் பூட்டி இருந்த நிலையில் தற்போதைய ஐந்தாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்க விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து திரையரங்குகள் திறந்தாலும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே திரையரங்குகள் திறந்தவுடன் முதல் படமாக விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை திரையிட்டால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் பயம் குறையும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. எனவே திரையரங்குகள் திறந்தவுடன் விஜய் மாஸ்டர்’ திரைப்படம் தான் முதலில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கேயார் கூறியபோது, ‘திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், விஜய்யின் ’மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதல் படமாக ’மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ளார். ’மாஸ்டர்’ படக்குழுவினர் இதுகுறித்து என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நாளை மறுநாளுக்குள் ஆஜராகாவிட்டால்? காட்மேன் படக்குழுவுக்கு காவல்துறை எச்சரிக்கை

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான 'காட்மேன்' வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில்

மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து பிரசன்னா வெளியிட்ட அறிக்கை!

நடிகர் பிரசன்னா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை மின்வாரிய அலுவலகம் பிரசன்னாவின்

தயாரிப்பாளர் தவறாக நடந்து கொண்டார்: பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர் அந்த சீரியலின் தயாரிப்பாளர்களில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால்

யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஆவேசம்

கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துளார்.

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பது உண்மையா? தயாரிப்பாளர் விளக்கம்

பிரபுதேவா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்