close
Choose your channels

நாளை மறுநாளுக்குள் ஆஜராகாவிட்டால்? காட்மேன் படக்குழுவுக்கு காவல்துறை எச்சரிக்கை

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டீசரில் அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து காட்மேன்’ தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை இருவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் காட்மேன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இன்னும் ஆஜராகாததால் காட்மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2-வது சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நாளை மறுநாள் காலை விசாரணைக்கு ஆஜராகவிடில் சட்டப்படி நடவடிக்கை என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘காட்மேன்’ படக்குழுவினர், காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்தது. மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இதுவரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.