தண்ணீர் பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி: இயக்குநர் எம்.ஏ. நிஷாத்

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' முதல் கோபி நயினார் இயக்கிய 'அறம்' வரை கோலிவுட் திரையுலகில் தண்ணீர் பிரச்சனையை அலசும் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இதே பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி'

மலையாளத்தில் சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ஏ. நிஷாத் இயக்கியுள்ள முதல் தமிழ்ப்படமான 'கேணி' படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஒரு பாடலில் “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார். ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை பழனிபாரதி எழுதியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ. நிஷாத் கூறியதாவது: கேணி எனது முதல் தமிழ்ப்படம். இதற்கு முன் கேரளாவில் நான் இயக்கிய ஏழு படங்களுமே சமூக சிந்தனை கொண்ட படங்கள் தான். அந்த வகையில் கேணியும் முழுக்க முழுக்க இந்த சமூகத்திற்கான படமாகவே இருக்கும். எதிர்காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சனையாக மாறப்போகிற தண்ணீர் குறித்தான விழிப்புணர்வை நிச்சயமாக “கேணி” ஏற்படுத்தும். காற்றைப் போல, வானம் போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை உரிமை கொண்டாடவும், அணைகள் கட்டி ஆக்ரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். அதே சமயம் கமர்சியல் சினிமாவிற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இத்திரைப்படத்தில் நிச்சயமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

More News

வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சிப்பது அநாகரீகத்தின் உச்சம்: சரத்குமார்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியே தெரிவித்தார்.

ரஜினி, விஜய் படங்களுக்கு பின்னர் 'பத்மாவத்' படத்திற்கு கிடைத்த பெருமை.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கம் உலகிலேயே அதிக இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய, மிக பிரமாண்டமான தியேட்டர் என்பது அனைவரும் அறிந்ததே

இன்று விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி

இன்று விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு நாளை இன்னுமொரு தீபாவளியாகவே கருதப்படுகிறது

என்கிருந்து குரல் வரவேண்டுமோ அங்கிருந்து வரவில்லை: ரஜினியை தாக்கிய பாரதிராஜா

வேலுபிரபாகரன் இயக்கவுள்ள 'கடவுள் 2' படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா,சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வைரஸ் தாக்குதலை முறியடித்து சாதிப்பார்களா விஜய் ரசிகர்கள்?

சமூக வலைத்தளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அது மிகையில்லை. விஜய் குறித்த எந்தவொரு செய்தி வெளிவந்தாலும் அதை டிரெண்டுக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முதல் வேலை