கொரோனாவுக்கு பலியான நடிகர்-தயாரிப்பாளர்: சோகத்தில் குடும்பத்தினர்

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகினர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். அந்த வகையில் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் தொழிலதிபராக இருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.ஹாசன் என்பவர் மலையாளத்தில் துபாய்க்காரன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். இவர் சமீபத்தில் துபாய்க்கு வேலை நிமித்தமாக சென்றபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்தபோது கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மேலும் மோசம் ஆகவே மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகர் ஒருவர் துபாயில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளது கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உயிரிழந்த எஸ்.ஏ.ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர் என்பதும் ஹாசனின் மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது சாதாரண அடி அல்ல, பிசாசுத்தனமான அசுர அடி: ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் அரசின் அதிரடி முடிவு!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 3 மாதமாக மூடிக் கிடக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய களிமண் எரிமலைகள்!!!

செவ்வாய் கிரகம் என்பது எரிமலை வெடிப்புக்கு பெயர் போனது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இந்த கிரகத்தில் எரிமலைகள் வெடிப்பதும் புதிய எரிமலைகள் உருவாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கணவரின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத மேக்னா ராஜ்: உருக வைக்கும் வீடியோ

நடிகர் அர்ஜுன் நெருங்கிய உறவினரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி? முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து