கியர் போட்ட கல்லூரி மாணவிகள்: சஸ்பெண்ட் ஆன பேருந்து டிரைவர்!

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று கொண்டிருந்த அந்த பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட கற்றுக் கொடுத்ததை அடுத்து அவரது லைசென்ஸ் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் ஷாஜி என்பவர் வயநாடு பகுதியில் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேருந்து ஒட்டிக் கொண்டிருந்த போது அவரது அருகில் இரண்டு கல்லூரி மாணவிகள் உட்கார்ந்துகொண்டு கியர் போட கற்றுக் கொடுக்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து அவர் பேருந்தை ஓட்டிக்கொண்டே அந்த கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட்ட கற்று கொடுத்தார். கல்லூரி மாணவிகள் கியர் போட டிரைவர் ஓட்டிக்கொண்டிருக்க, அதில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்தனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இதுகுறித்து போக்குவரத்து வட்டார அலுவலக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து டிரைவர் ஷாஜியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதுகுறித்த விசாரணைக்கு பின்னர் அவரது டிரைவிங் லைசென்ஸ் ஆறுமாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதுமட்டுமின்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பயணிகளுக்கு ஆபத்தானதாக முடியும் என்றும், இவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

கூகுள், ஆண்ட்ராய்டுலாம் வேணாம்.. நாங்களே ஒரு OS செய்யப் போறோம்..! Facebook அதிரடி.

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது.

`மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்!’- ஜாமியா மாணவருக்காகக் கலங்கிய ஹர்பஜன் சிங்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்திவருகின்றனர்

காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளம்பெண்

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

இதுதான் அமைதியான போராட்டமா? ரஜினி சொன்னதுதான் சரி! பிரபல நடிகர் 

மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக

பிரபல கிரிக்கெட் வீரரிடம் பாராட்டை பெற்ற சூரி மகன்!

திரையுலகினர்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரையுலகில் நுழைந்து வந்தாலும், ஒரு சில வாரிசுகள் விளையாட்டுத் துறையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது குறித்த செய்தியை