கேரள இளம்பெண்ணின் மர்ம மரண வழக்கு: கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

  • IndiaGlitz, [Monday,May 23 2022]

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்தியாவையே அதிர செய்த இளம்பெண் விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதோடு, தண்டனை விபரங்களை நாளை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற ஆயுர்வேத மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மாணவிக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆக பணியாற்றிய கிரண்குமாருக்கும் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து ஒரு ஆண்டு மட்டுமே ஆகியிருந்த நிலையில் திடீரென விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது .

வரதட்சணை கொடுமை காரணமாக தான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது உறவினர்கள் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே விஸ்மயா தனது உறவினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த காயம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் விஸ்மயா மரணத்திற்கு முன்பு கிரண்குமார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததும் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் வாதங்கள் முடிந்து அதிரடியாக இன்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதோடு அவருக்கு என்ன தண்டனை என்பது நாளை அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

இந்த வழக்கில் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென கழன்று விழுந்த ஆடை: நடிகைக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு டபுள் ரோல்? உறுதி செய்த பிரகாஷ்ராஜ்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்!

திறமை இருந்தும் பல ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்துவந்த தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்காவிற்கு

'டிமாண்டி காலனி' இரண்டாம் பாகம்: ஆனால் மிகப்பெரிய மாற்றம்!

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' வெளியாகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலம்: கசிந்தது 'விக்ரம்' பட ரகசியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும் அந்த தகவல் சமீபத்தில் கசிந்தது என்பதும் அதனை அடுத்து படக்குழுவினர்களே