ஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி! 

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

கேரள மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ மாணவிகள் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாகவும் அவர்களில் ஒரு மாணவி பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் 18 பேர் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டனர். ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தேவநந்தா என்ற மாணவி உயிரிழந்துள்ளார். மற்ற மாணவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் உடனடியாக ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ஷவர்மாவை சமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி விட்டன .

ஷவர்மாவில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி விஷத்தன்மை உடையதாக மாறியிருந்ததால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, தற்போது இளைய தலைமுறையினர் ஷவர்மா என்ற உணவை விரும்பி சாப்பிட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஜீ5 தளத்தின் ஹாட்ரிக் வெற்றி: பார்வையாளர்கள் மகிழ்ச்சி

ஜீ5 தளத்தில் வெளியான விமல் நடித்த 'விலங்கு' என்ற வெப்தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 'அனந்தம்', 'கார்மேகன்' ஆகிய தொடர்களும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது.

கொல்றது அவங்க நோக்கமில்லை, வேற ஏதோ காரணம் இருக்கு: 'விசித்திரன்' டிரைலர்

ஆர்கே சுரேஷ் நடித்த 'விசித்திரன்' திரைப்படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்சிகள், பின்னணி இசையில் மிரட்டும் 'இரவின் நிழல்' டீசர்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக முதல்வர் மனைவியிடம் இருந்து விருது வாங்கிய தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களிடம் இருந்து தமிழ் நடிகை ஒருவர் 'பவர் ஆப் வுமன்' என்ற விருதைப் பெற்றுள்ள நிலையில் இது குறித்த

ஏ.ஆர்.ரஹ்மான் முன் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: வைரல் வீடியோ

மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த இயக்குனர் பார்த்திபன் ஏஆர் ரகுமான் முன்பே மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .