close
Choose your channels

ஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி! 

Monday, May 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ மாணவிகள் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாகவும் அவர்களில் ஒரு மாணவி பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் 18 பேர் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டனர். ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தேவநந்தா என்ற மாணவி உயிரிழந்துள்ளார். மற்ற மாணவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் உடனடியாக ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ஷவர்மாவை சமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி விட்டன .

ஷவர்மாவில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி விஷத்தன்மை உடையதாக மாறியிருந்ததால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, தற்போது இளைய தலைமுறையினர் ஷவர்மா என்ற உணவை விரும்பி சாப்பிட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.