டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சென்டரில் படித்த பெரும்பாலான மாணவர்கள் மாரஞ்ச்சேரி பகுதியில் உள்ள பொன்னானி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரே இடத்தில் டியூசன் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பயிலும் பள்ளியிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பரிசோதனையில் இதுவரை 190 மாணவர்கள் மற்றும் 79 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தனியார் டியூசன் சென்டர் வழியாகத்தான் கொரோனா பாதிப்பு மற்றவர்களுக்கு பரவி இருக்கிறது என்ற தகவலையும் அம்மாநிலச் சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதனால் டியூசன் சென்டர் அமைந்து இருக்கும் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. கேரளாவில் ஒரே நேரத்தில் இத்தனை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தற்போது அம்மாநிலத்தில் கடும் பீதி ஏற்பட்டு இருக்கிறது.

 

More News

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு: நயன் குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்

காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு விழாவாக மாறும் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்! தமிழக முதல்வர் அறிவிப்பு!

புகழ் பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிறந்த முருகப் பக்தராகவும் அறியப்பட்ட கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

நான் அப்பவே சொன்னேன்… இந்திய ரசிகர்களை சீண்டி இங்கிலாந்து வீரர் போட்ட அதிரடி டிவிட்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னதாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர்.

சசிகலா ராஜமாதாவா? கிழித்தெடுத்த ஜெயலலிதாவின் தோழி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனது குறித்தும், பெங்களூரிலிருந்து சென்னை வந்தது குறித்துமான செய்திகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டு