'கேஜிஎப்' யாஷ் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தை தயாரிக்கின்றாரா? ஆச்சரியத்தில் திரையுலகம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் பிரம்மாண்டமான படத்தின் இணை தயாரிப்பாளராக கன்னட நடிகர் யாஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறிய பிரபல கன்னட நடிகர் யாஷ் தற்போது ’டாக்ஸிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அவரே தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வரும் நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் ’ராமாயணா’ என்ற படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் யாஷ் ராவணனாக நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக நடிகர் யாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கன்னட திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments