இந்திய அணியின் அடுத்த கேப்டன் கே.எல்.ராகுல்… வெளியான பரபரப்பு தகவல்!

டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள இத்தொடர் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் இருப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

2021 ஐபிஎல் இரண்டாம்கட்ட போட்டிகள் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது டி20 உலகக்கோப்பை போட்டித் தொடருக்குப்பின் டி20 வடிவிலான இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார். இதையடுத்து துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி வருகின்றனர். இதற்கு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டிகள், இங்கிலாந்து தொடர் போட்டி, அடுத்து ஐபிஎல் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டிகள் என்று இந்திய வீரர்கள் ஓய்வின்றி விளையாடி வருவதாகவும் இதனால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் அந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. கே.எல்.ராகுல் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை அரைஇறுதிக்குள் நுழையுமா?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் எந்தவித போராட்டமும்

'தேவர் மகன்' வசனத்தை கமல்ஹாசனுக்கு நன்றியாக கூறிய சூர்யா!

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை பார்த்து கமல்ஹாசன் இன்று பாராட்டு தெரிவித்த நிலையில் அவருக்கு அவருடைய வெற்றிப்படங்களில் ஒன்றான தேவர்மகன் படத்தின் வசனத்தை கூறி சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டு காதலரை பிரேக் அப் செய்துவிட்டாரா பிரியா பவானிசங்கர்?

நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை பத்தாண்டு காலமாக காதலித்து வந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது காதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

விருது பெற்றதும் நடிகர் விஜய்சேதுபதி செய்த காரியம்… குவியும் பாராட்டு!

“சூப்பர் டீலக்ஸ்“ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் விஜய்சேதுபதி, துணைநடிகருக்கான

ஜீன்ஸ் அணிந்ததற்காக இளம் பெண்ணுக்கு நடந்த அவலம்!

அசாம் மாநிலத்தில் பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்துவந்த இளம் பெண்ணை கடைக்காரர்