சென்னை தனியார் பள்ளி பாலியல் விவகாரம்: கொதித்தெழுந்த கோலிவுட் பிரபலங்கள்!

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சற்றுமுன்னர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோலிவுட் பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ‘கர்ணன்’ படத்தில் நடித்த லட்சுமி பிரியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளனர்.

இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்பதும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அச்சுறுத்தும் யாஸ் புயல்… தமிழகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

கிழக்கு மத்திய வங்கக்கடல் (வடக்கு அந்தமான்) பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு

டாக்டர், எஞ்சினியர் ஆகுப்பா, இதெல்லாம் தேவையில்லாத வேலை: ரசிகருக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை!

டாக்டர், என்ஜினீயர் ஆவதை விட்டுவிட்டு இதெல்லாம் ஏன் தேவையில்லாத வேலை என ரசிகர் ஒருவருக்கு பிரபல தமிழ் நடிகை ஒருவர் அட்வைஸ் கூறியுள்ளார் 

டுபீஸ் பிகினி உடையில் விஷால்-ஜெயம் ரவி நாயகி: வைரல் புகைப்படம்!

விஷால், ஜெயம் ரவி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவு

சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக பிரபலம் எச் ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்...! உருக்கமாக பேசிய முதல்வர்...!

கொரோனாவை பிறருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம்