உலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்!

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி கௌசல்யா என்பவர் சமீபத்தில் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார் என்ற செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முதல்முறையாக இவர் தான் சரியாக 15 கேள்விகளுக்கும் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளியாக இருந்தும் கேட்ட கேள்விகளுக்கு அசைவுகளின் மூலமே சரியான பதிலளித்தார் என்பதும் மதுரையை சேர்ந்த இவர் பட்டமேற்படிப்பு படித்து படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரூ.1 கோடி பரிசு வென்ற கெளசல்யா, உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, அதனை இன்று நடிகை ராதிகா நிறைவேற்றியுள்ளார். இன்று கெளசல்யா தனது குடும்பத்தினர் மற்றும் ராதிகாவுடன் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசிபெற்றார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

More News

அமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

நடிகை அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் அமலாபால் 'க்ராவ் மகா' என்ற தற்காப்பு கலையை பயன்படுத்தியுள்ளார்

'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

எத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்

ஒரு ரஜினிகாந்த் அல்ல எத்தனை ரஜினிகாந்த் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 

டெங்கு கொசுக்களை ஒழிக்க செயற்கை கொசுக்கள்  உருவாக்கம்

கலிபோர்னிய சான் டியாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தற்போது செயற்கையாக ஒரு புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளனர்.

ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து

ரஜினிகாந்த் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும், பேட்டி அளித்தாலும் அவரது கருத்துக்கு எதிர் கருத்து கூறுவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.