ஒரே நாளில் 500க்கும் மேல் பாதிப்பு எதிரொலி: கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

  • IndiaGlitz, [Monday,May 04 2020]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 266 பேர்கள் என்றும் கடலூரை சேர்ந்தவர்கள் 122 பேர்கள் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை உடனடியாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், வரும் 7ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட் திருமழிசையில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்கள் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதிலாக திருமழிசை சேட்டிலைட் நகரத்தில் கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே வரும் 7ஆம் தேதி முதல் காய்கறிகளை மொத்தமாக வாங்குபவர்கள் திருமழிசை செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More News

சொந்த ஊரை சேர்ந்த 250 குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்த நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி மக்கள் உள்பட பலர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல்

அடுத்தவனை கேலி பண்ணா பத்தாது: கொஞ்சம் பொறுப்பா இருங்க: நடிகர் சாந்தனு

அடுத்தவர்களை கேலியும் கிண்டலும் செய்தால் மட்டும் பத்தாது, கொஞ்சம் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.9 கோடி வழங்கிய பிரபல திரைப்பட கதாசிரியர்!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு துறையினர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24 ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்