இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்: லேப் டெக்னீஷியன் கைது!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

இளம் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்த லேப் டெக்னீசியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் 24 வயது பெண் ஒருவர் வணிக வளாகம் ஒன்றில் பணி செய்து கொண்டிருந்தார். அவருடன் வேலை பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பெண் தனக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா? என்று சோதனை செய்ய முடிவு செய்து, கொரோனா அவசர சிகிச்சை மையத்திற்கு சென்றார்

அங்கிருந்த லேப் டெக்னீஷியன் ஒருவர் அந்த பெண்ணின் மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்து அதன் பின்னர் அந்தரங்க உறுப்பில் இருந்தும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா டெஸ்ட் குறித்து அந்த பெண்ணுக்கு எதுவும் தெரியாததால் அதற்கும் அவர் சம்மதித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் தனது தோழிகளிடம் கூறியபோது தோழிகள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தரங்க உறுப்பில் இருந்து கொரோனா டெஸ்ட் எடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர்கள், அதன்பின் மருத்துவரிடம் சென்று கொரோனா டெஸ்ட் எப்படி எடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்தனர். அதற்கு மருத்துவர் தொண்டை அல்லது மூக்கு வழியாக மட்டுமே சளி எடுக்கப்படும் என்று விளக்கியுள்ளனர்

இதனையடுத்து லேப் டெக்னீசியன் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததை உறுதி செய்துகொண்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லேப் டெக்னீஷியன் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவின் பெயரைச் சொல்லி பாலியல் சீண்டல் செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தனிமைப்படுத்தப்படும் மையத்தில் தனிமையில் இருக்கும் ஒரு சில பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் சோதனை செய்ய சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

கடன் கட்ட அவகாசம் தந்துவிட்டு வட்டி போடுவதா? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வருமானம் இழந்து

சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை

ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாத மாணவிக்கு ஐபோன் அனுப்பிய தமிழ் நடிகை!

நீட் தேர்வுக்கு தயார் செய்ய ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகை ஒருவர் ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அம்மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

போதையில் தாய்ப்பால் கொடுத்ததால் இறந்த குழந்தை: நீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்பு

பீர் குடித்துவிட்டு போதையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்த வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற பெண், மேல் முறையீட்டு மனு செய்திருந்த