நாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 1 முதல் ஜூன் 30 நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த 5ஆம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது

இதன்படி ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம் என்றும், மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்றும், கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி என்றும், அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது என்றும், பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது என்றும், சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

More News

33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு

கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான 'பருவராகம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ரவிச்சந்திரன். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நாட்டுக்கு ஒரு நல்லவன்'

பீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்

கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில் சென்று கொண்டிருந்தபோது

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்தரன் அவர்கள் இயக்கிய 'நேரம்' மற்றும் 'பிரேமம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

ஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. நாட்டில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஊடகங்கள் சீரியஸாக செய்திகளை வெளியிட்டு