close
Choose your channels

பீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்

Saturday, May 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் பயணத்தின்போது பரிதாபமாக உயிரிழந்தார். முஷாபர்பூர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தாய் இறந்ததும்கூட தெரியாமல் அவரது ஒரு வயது குழந்தை, தாய் தூக்கத்தில் இருப்பதாக நினைத்து போர்வையை பிடித்து இழுத்து அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சிகளின் வீடியோ நாடு முழுவதும் வைரலானது. பார்த்தவுடன் கண்கலங்க வைத்த இந்த வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

இந்த நிலையில் பீகார் முஷாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடி கொண்டிருந்த குழந்தையின் எதிர்காலம் குறித்து அனைவரும் கவலைப்பட்டு கொண்டிருந்த நிலையில், பீகார் மாநில எஸ்.டி.பி.ஐ அமைப்பை தலைவர் நசீம் அக்தர் என்பவர் அந்த குழந்தையை தற்போது தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.