தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! சென்னையில் தொடர்கிறது முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார்

இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் பகுதியில் மட்டும் ஊரடங்கு அல்லது தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் எனவும் தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லாமல் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அடங்கி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைவதை அடுத்து மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்தது.

சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக புகார்

சாத்தான்குளம் தந்தை மகன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமாக மரணம் அடைந்தது குறித்த வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக சாத்தான்குளம்

எலியும் பூனையுமாக சீறிக் கொள்ளும் இந்தியா-சீனா: அடிப்படை காரணம்தான் என்ன???

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் எல்லைப் பிரச்சனை இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்தது அல்ல.

வந்துவிட்டது சீனாவின் கொரோனா தடுப்பூசி: இராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தி சோதனை!!!

சீனாவின் இராணுவ மருத்து அகாடமியின் அங்கமான கேன்சினோ நிறுவனமும் பெய்ஜிங்கின் பயோ டெக்னாலஜி

700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படாததால் தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு வருவதாகவும்