கடைசியில செல்லத்தையும் அழ வச்சிட்டிங்களே! பிக்பாஸை திட்டித்தீர்த்த லாஸ்லியா ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக ஒருபக்கம் சொந்தக்கதை, சோகக்கதை இன்னொரு பக்கம் சண்டை சச்சரவு என போய் கொண்டிருந்த நிலையில் இதில் எதிலும் பங்கு பெறாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்து வந்த ஒரே நபர் லாஸ்லியாதான். அவரது அமைதிக்கு பின் ஒரு பெரிய சோகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் கமல்ஹாசன் தோன்றும் இன்றைய நாளில் லாஸ்லியா தனது சோகக்கதையை சொல்லி கதறியழ பிக்பாஸ் குடும்பமே கண்ணீர்க்கடலில் மூழ்கிவிட்டது. ஒவ்வொரு இலங்கை தமிழ் மக்களுக்கும் ஒவ்வொரு சோகக்கதை இருக்கும் என்றாலும் லாஸ்லியாவின் சோகக்கதைக்கு எந்த அளவு வீரியம் இருக்கும் என்பதை மற்ற போட்டியாளர்களின் அழுகையில் இருந்து தெரிய வந்தது. இதனையடுத்து லாஸ்லியாவின் சிரிப்பை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட அவருடைய ஆர்மியினர் அவருடைய அழுகையை பார்த்துவிட்டு பிக்பாஸை திட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர்.

வழக்கம்போல் புரிந்த மொழியில் புரியாத கருத்துக்களை கூறும் கமல்ஹாசன், 'காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது. அன்பாய், உள்ளங்களின் உண்மை முகங்கள், உணர்வுகளை உறுதியோடு பகிர்ந்து கொண்டது ஒரு புதிய குடும்பம் பூத்திருக்கின்றது. குடும்பத்தின் தலைவனாக உங்கள் நான்' என்று கூறி புரமோவை முடித்துள்ளார்.

மொத்தத்தில் இளகிய மனம் கொண்ட லாஸ்மியா ஆர்மியினர் இன்றைய நிகழ்ச்சியை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது

More News

ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! சென்னையில் பரிதாபம்

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் புடவை ஒன்றில் மனைவி தூக்கில் தொங்கி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சோக நிகழ்ச்சி

பிக்பாஸ் மீராமிதுனுக்கு கொலை மிரட்டல்: போலீஸில் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது பாகம் கடந்த ஞாயிறு தொடங்கிய நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அதாவது கடந்த செவ்வாய் அன்று 16வது போட்டியாளராக நடிகை மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இணைந்தார்

பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கணேஷுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை

அமலாபால் நடித்த 'ஆடை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை அமலாபால் நடித்த ஆடை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் வெளிவந்த

இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபால் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டே வருடங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடு