கவினை மிஸ் பண்ணிட்டீங்களா? லாஸ்லியா கூறிய க்யூட் பதில்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்ட கவின் மற்றும் லாஸ்லியா காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள கூட இல்லை என்றும் அவர்களது காதல் பிரேக்கப் ஆகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் கவினுக்கு திருமணம் நடந்த நிலையில் கவினை மிஸ் செய்து விட்டீர்களா என்ற கேள்விக்கு லாஸ்லியா க்யூட்டான பதில் அளித்துள்ளார். ’கவினின் வாழ்க்கை சூப்பரா போய்க் கொண்டிருக்கின்றது, இதில் நான் என்ன கமெண்ட் செய்வது? நான் அவருடைய வாழ்க்கையை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ஆகட்டும், திரைப்பட வாழ்க்கை ஆகட்டும், நன்றாக போய்க்கொண்டிருக்கிறது, வெளியில் இருந்து பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இதில் நான் ஃபீல் பண்ணுவதற்கு எதுவுமே இல்லை.
மூன்றாவது நபர் வெளியில் இருந்து பார்க்கும் போது எங்களை கனெக்ட் பண்ணி பேசுவார்கள். என்னால் அதற்கு ஒன்றும் பண்ண முடியாது, கவின் திருமணம் என்னை எந்த விதத்தில் பாதிக்கவில்லை, அவருக்கும் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
மேலும் ’பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது, இதுக்கு மேல என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இதை பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments