close
Choose your channels

ஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி!

Sunday, November 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று ஒரே மரத்தில் கட்டிப் பிடித்தபடி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால் மட்டும் ஸ்ரீஷா என்ற காதல் ஜோடி கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். தங்களுடைய காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இருவரும் தங்களுடைய பெற்றோர்களிடம் திருமணத்திற்காக அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இரு தரப்பின் பெற்றோர்களும் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமன்றி ஸ்ரீஷாவை அவருடைய பெற்றோர்கள் வேறு ஒருவருக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய காதல் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் இணைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இதனை அடுத்து அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் இருவரும் கட்டிப் பிடித்தவாறு ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி மரணமடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து காவல்துறையினர் உடனடியாக வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos