லைகா நிறுவனத்தின் அடுத்த படம் இதுதான்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

’பொன்னியின் செல்வன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும், அதுமட்டுமின்றி ரஜினியின் இன்னொரு படத்தையும் லைகா தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவும் ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனல்கண்ணன் சண்டை பயிற்சியில் விவேக் மற்றும் அமுதவன் பாடல் வரிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'துணிவு' திரைப்படத்தில் அஜித் பாட்டு பாடியிருக்கின்றாரா?

தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. குறிப்பாக 'வாரிசு' திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்

உடம்பு முழுவதும் பேண்டேஜ்.. என்ன ஆச்சு இந்த நடிகைக்கு? 

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான உர்ஃபி ஜாவித் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்கள்

உங்களுக்கு BP இருக்கா அசீம்? ரவுண்டு கட்டிய ஜனனி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம், கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டு விட்டார் என்பதும், தான் சொல்ல வேண்டிய கருத்தை ஆவேசமாக கூறிவிட்டு எதிராளியின் கருத்தை

'நான் அந்த புள்ளையை தங்கச்சி மாதிரி நினைச்சிருந்தேன்': ஏடிகே ஆவேசமானது ஏன்?

 பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது என்பதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் வகையில் புரமோ வீடியோக்கள்

தனலட்சுமிக்கு தண்டனை கொடுங்க.. பிக்பாஸிடம் முறையிடும் பெண் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக எந்த சண்டை வந்தாலும் அதில் தனலட்சுமி இருக்கிறார்