close
Choose your channels

எங்கே போனாள் தெரியவில்லை.. வாசலில் மட்டும் அவளின் காலணி: மகள் தூரிகை குறித்து கபிலன் எழுதிய கண்ணீர் கவிதை!

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மகள் பிரிவால் வாடி நிற்கும் கவிஞர் கபிலன் முன்னணி ஊடகம் ஒன்றில் கண்ணீர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

எல்லா தூக்க மாத்திரைகளையும்
அவளே போட்டுக் கொண்டால்
நான் எப்படி தூங்குவேன்..!

எங்கே போனாள்
என்று தெரியவில்லை
அவள் காலனி மட்டும்
என் வாசலில்..!

மின் விசிறி
காற்று வாங்குவதற்கா..
உயிரை வாங்குவதற்கா..?

அவள் கொடுத்த
தேனீர் கோப்பையில்
செத்து மிதக்கிறேன்
எறும்பாய்..?

அவளுக்கு
கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையா
எனக்குத் தெரியாது
அவளே என் கடவுள்..!

குழந்தையாக
அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற
பாரம் இன்னும் வலிக்கிறது.
கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா
கண்களின் வலி.

யாரிடம் பேசுவது
எல்லா குரலிலும்
அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம் வீடு
முழுக்க நிரம்பி இருக்க
இருந்தாலும் இருக்கிறது
இருட்டு.

பகுத்தறிவாளன்
ஒரு கடவுளை
புதைத்து விட்டான்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment