close
Choose your channels

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

Tuesday, February 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாடலாசிரியர் சினேகன்,’ சினேகம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி சினேகன் புகார் அளித்திருந்தார். சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்,

அதேபோல் சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகை ஜெயலட்சுமியும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சற்றுமுன் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இன்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment