தடுப்பூசி போட்டால் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதியா? முதல்வருக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் எழுதிய கடிதம்!

சுரேஷ் காமாட்சி தயாரித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென தமிழக அரசு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதித்துள்ளதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டில் இருந்து பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்குகள் வெறிச்சோடி தொடங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களை உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது. 50 விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி 100% இருக்கை ஆக்கிரமிப்பை தந்தது திரையரங்குகளுக்கு பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாக பார்த்தோம் நன்றியோடு!

ஆனால் இப்போது வேக்ஸினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க இன்னும் தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

உங்கள் ஆட்சியில் தடுப்பூசி செலுத்துவது மிகவும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முககவசம் சனிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்து வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போடாதவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவும் திரைத்துறையை வெகுவாக பாதிக்கும்.

ஆண்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்து வரச் சொன்னால் திரையரங்கம் வருவதையே அவர்கள் தவிர்ப்பார்கள். அதுவும் திரையரங்கம் வந்து திரும்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

எனவே தயவுசெய்து 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்

More News

ஷங்கர்-ராம்சரண் படத்தின் சாட்டிலைட்-டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்

சாலையில் பொழிந்த திடீர் பணமழை… துள்ளிக்குதித்த வாகன ஓட்டிகள்!

அமெரிக்காவில் உள்ள சாலையொன்றில் திடீர் பணமழை பொழிந்துள்ளது

11 வருட காதலியை கரம்பிடித்த “வலிமை“ நடிகர்… வைரல் புகைப்படம்!

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் “வலிமை“

சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதம் நடந்தால்? பழங்குடியின மக்கள் எச்சரிக்கை!

​​​​​​​சூர்யாவுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பாம்பை கொண்டு எறிவோம் என பழங்குடியினர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த வார வைல்ட்கார்ட் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் ஒரு போட்டியாளர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.