close
Choose your channels

ஷங்கர்-ராம்சரண் படத்தின் சாட்டிலைட்-டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா?

Monday, November 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் குறித்த செய்தி வெளியாகி திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரூ. 170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படம் திரையரங்குகளில் தான் நேரடியாக ரிலீசாகும் என்றாலும் திரையரங்கு ரிலீஸுக்கு பின்னர் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்காக மட்டும் ரூபாய் 350 கோடி கொடுத்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராம்சரண் தேஜா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.