தனுஷின் 'மாரி 2' குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்ற தகவல் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் வெளியாகவுள்ள முதல் சிங்கிள் பாடலை ரசித்து கேட்க தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

 

More News

கஜா புயல் நிவாரண களத்தில் இறங்கிய மும்தாஜ் ஆர்மிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர், நடிகைகளும், அவர்களது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னலம் கருதாது நிவாரண பணிகளை செய்து வருகின்ரனர்.

தனுஷின் 'மாரி 2' சென்சார் தகவல்கள்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டினேனா? பத்திரிகையாளர்களை விளாசும் காயத்ரி ரகுராம்

நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் அபராதம் கட்டியதாக முன்னணி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரொமான்ஸ் காமெடி படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று லதா ரஜினிகாந்த் அவர்களின் அறக்கட்டளை சார்பில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். குழந்தைகள் நலன் குறித்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: