'ரெளடி பேபி'க்கு கிடைத்த மகத்தான பெருமை!

  • IndiaGlitz, [Sunday,June 02 2019]

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி' பாடல் யூடியூபில் அவ்வப்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்து வந்தது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் தற்போது 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. தென்னிந்திய மொழிகளில் வெளிவந்த பாடல் ஒன்று முதல்முறையாக 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், 'இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும் 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும் 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஆறு மாதங்களில் 1000 மில்லியன் பார்வையாளர்களையும் இந்த பாடல் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியுடன் 5வது முறையாக இணையும் பிரபல நடிகை!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன், சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது 'சிந்துபாத்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

'காஞ்சனா' இந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு

காஞ்சனா தமிழ் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான 'லட்சுமிபாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இறுதி நாள் படப்பிடிப்பு: விக்ரமுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

கடும் வெயில்: 50 காவல்துறையினர்களுக்கு கூலிங் கிளாஸ் கொடுத்த தமிழ் நடிகர்

கடுமையான வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறையினர்கள் சுமார் 50 பேர்களுக்கு நடிகர் ஜெய்வந்த் கூலிங் கிளாஸ் வாங்கி கொடுத்துள்ளார்.