கணவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்த ஜெ.தீபா

  • IndiaGlitz, [Saturday,January 12 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சமீபத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் இருந்து கருத்துவேறுபாடு காரணமாக தீபாவின் கணவர் மாதவன் விலகி “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.

இந்த நிலையில் சமீபத்தில் மாதவனும், தீபாவும் இணைந்து செயல்படுவதென முடிவெடுத்தனர். அதுமட்டுமின்றி 'அதிமுகவுடன் விரைவில் இணைந்து செயல்பட போவதாகவும் சமீபத்தில் தீபா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவனை தீபா நியமித்துள்ளார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீபா அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

 

More News

'தளபதி 63' படத்தில் இணைந்த பா.ரஞ்சித் பட ஹீரோ?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நேரலை பார்க்க உதவும் செயலி

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியை நீதிமன்றம் தடை செய்திருந்த நிலையில் இளைஞர்களின் எழுச்சியால் அந்த தடை உடைக்கப்பட்டு க

சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை விருந்து!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' திரைப்படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' திரைப்படமும் உருவாகி வரும் நிலையில் 2 படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.

சென்னையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் நகுல் மனைவி

சென்னை ஐஐடி வளாகத்தில் கின்னஸ் சாதனைக்காக 100 அடியில் முறுகலான கமகம நெய் தோசை சுடப்பட்டது.

கீர்த்திசுரேஷின் 20வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் மூன்றே ஆடுகளில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்