close
Choose your channels

மதுவந்தி மகன் PBSS பள்ளியில் படிக்கவில்லையா? நெட்டிசன்கள் பகிர்ந்த புகைப்படங்கள்!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் இராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே பள்ளியை சேர்ந்த மேலும் சில ஆசிரியர்கள் மீது விசாரணை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள வேறு சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதே போன்ற புகார்கள் வந்திருப்பதாகவும் இந்த புகார்கள் அனைத்தும் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் குற்றம் செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்றும் அதற்காக ஒட்டுமொத்த பள்ளியை குறை சொல்லக் கூடாது என்றும் கூறினார். மேலும் இது தனது தந்தையோ அல்லது தானோ நடத்தும் பள்ளி அல்ல என்றும் தனது தந்தை இந்த பள்ளியின் டிரஸ்டி மட்டுமே என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி குறித்து பெருமையுடன் கூறும் மதுவந்தியின் மகன் பத்மா சேஷாத்திரி பள்ளியில் படிக்கவில்லை என்ற தகவலை தற்போது நெட்டிசன்கள் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளனர். ஊட்டியில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் மதுவந்தி மகன் ரித்விக் படிப்பதாகவும் பகிரப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.