close
Choose your channels

ம.பியில் பூதாகரமாகும் விஷச்சாராய விவகாரம்? 20 ஆக அதிகரித்த உயிரிழப்பு!!!

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் நேற்று விஷச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல மேலும் பலர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் நரோட்டம் மிஷ்ரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதனால் பொறுப்பு அதிகாரிகள் பலர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல நேற்று முன்தினம் உத்திரப் பிரதேசத்தின் சிக்கிந்திராபாத் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ம.பியில் நேற்று விஷச்சாரய சம்பவம் பூதாகரமாகி இருக்கிறது. தற்போது உயிரிழப்பின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் பலர் இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.