சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதை எதிர்த்து கூட்டப்பட்ட கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 நடிகர்கள் பத்திரிகையாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் எட்டு நடிகர்களும் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் சமீபத்தில் அவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை உதகை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா உள்பட 8 நடிகர்களும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சற்று முன் நடந்தபோது பிடிவாரண்ட்டுக்கு எதிராக நடிகர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஜூன் 17ஆம் தேதிக்குள் 8 நடிகர்களும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணைக்கு பின்னர் சூர்யா உட்பட 8 நடிகர்கள் மீதான பிடிவாரண்ட்டுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

More News

'காலா' படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'காலா' என்பதை காலையில் பார்த்தோம்

தலைகீழா பார்த்தால் தமிழீழம் தெரிகிறதா? பரபரப்பை ஏற்படுத்திய 'காலா' வதந்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியானது.

மீண்டும் இணைகிறார்களா மணிரத்னம்-ஐஸ்வர்யாராய்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் வில்லனாக அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

ரஜினியால் தமிழகத்துக்கு பேராபத்து: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுமே கருத்துகூறி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து கூறி வருகின்றனர்...

கலகல கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் காமெடி சாம்ராஜ்யம் செய்த நடிகர்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி.