close
Choose your channels

சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதை எதிர்த்து கூட்டப்பட்ட கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 நடிகர்கள் பத்திரிகையாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் எட்டு நடிகர்களும் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் சமீபத்தில் அவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை உதகை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சூர்யா உள்பட 8 நடிகர்களும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சற்று முன் நடந்தபோது பிடிவாரண்ட்டுக்கு எதிராக நடிகர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஜூன் 17ஆம் தேதிக்குள் 8 நடிகர்களும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணைக்கு பின்னர் சூர்யா உட்பட 8 நடிகர்கள் மீதான பிடிவாரண்ட்டுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.